கண் பார்வைக் குறைபாடுகள்
Saturday, December 12, 2020
மனிதனின் கண் என்பது 576 மெகாபிக்ஸல் கேமரா. ஒரு லென்ஸ் மற்றும் ஒரு திரை. திரைதான் ரெட்டினா. திரை நகராது இருக்கும். இந்த லென்ஸை தசைகளால் சுருக்கவும் நீட்டவும் முடியும். அதன்மூலம் பக்கத்தில் இருக்கும் பொருளுக்கும் தூரத்தில் இருக்கும் பொருளுக்கும், பார்வையை அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் எடுத்துப்போக முடியும்.
நமக்கு வரும் பொதுவான கண் பார்வைக் குறைபாடுகளாக மூன்றைச் சொல்லலாம்.
முதலாவது, கிட்டப்பார்வை (Myopia). கிட்டப்பார்வை என்றால் அருகில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தெளிவாக இருக்கும். ஆனால், தூரத்தில் இருப்பவை தெரியாது. கண்கோளம் நீட்சி அடைவதால் அல்லது ஆஸ்டிக்மாட்டிஸம் எனப்படும் கார்னியா அமைப்பின் கோளாறால் ஒளி அலைகள் ரெட்டினாவுக்கு முன்பே குவியும். அப்போது தூரத்துப் பொருட்கள் மங்கலாகவே இருக்கும். யாரோ நடந்து வருகிறார்கள் என்று நினைத்திருந்து, அருகில் வந்தவுடன், “ஓ! சங்கரா? அதான் சங்கர் மாதிரியே இருக்கேன்னு பாத்தேன்” என்பார்கள். இவர்களுக்குக் கண்ணாடி அணிவது பலன் தரும். அவை குழி ஆடி (concave lens) வகையைச் சார்ந்தது. அவை ஒளியை இன்னும் கொஞ்சம் விரட்டி சரியாக ரெட்டினாவில் விழச் செய்யும்.
அடுத்தது, தூரப்பார்வை (Hyperopia). கிட்டத்து ஒளி அலைகள் ரெட்டினாவில் குவியாமல், ரெட்டினாவையும் தாண்டி அதன் பின்புறத்தில் குவிவதால், பார்வை தெளிவாக இருக்காது. இவர்களுக்கு குவி ஆடி (convex lens) வகையைப் பொருத்துவார்கள். அவை, ஒளியை சரியாக ரெட்டினாவில் விழச்செய்யும்.
கடைசியாக, வயதான காரணத்தால் கண் லென்ஸின் இயல்பான சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைவதால், சிறு எழுத்துகளை நம்மால் தெளிவாகப் படிக்க முடியாது
ஆம். மிகவும் தெளிவான விளக்கம்... இதைத்தான் "கிட்டக்குழி தோண்டி தூரக்குவி" என்கிற சொல்லடையில் வரையறுப்பார்கள். அதாவது, கிட்டப்பார்வை குறைபாடு என்றால் குழி ஆடியும், தூரப்பார்வை குறைபாடு என்றால் குவி ஆடியும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக இவை ஏற்படுவதற்கான காரணம் லென்ஸ் மற்றும் திரைக்கான தூரம் ஏற்றத்தாழ்வினால் ஏற்படுகிறது. இதற்கு விழித்திரையில் சரியான நீர்மத்தன்மை மாற்றமடைவதாலும், லென்ஸின் சுருங்கி விரியும் தன்மை குறைவதாலும் ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கான காரணமாவது நம் கண்களுக்கும் உற்று நோக்கும் பொருளுக்கும் இடையே தொடர வேண்டிய தூரத்தை சரிவர செய்யாததன் விளைவே! அதாவது, பொருளினை கண்களுக்கு மிக அருகிலோ அல்லது அதிக தூரத்திலோ வைப்பதாலும், மிக அதிக நேரம் ஒரே இடத்தினை உற்று நோக்குவதாலும், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமலிருந்தாலும் இது போன்ற குறைபாடுகள் ஏற்படும். வாழ்வியல் முறையை சரிவர பின்பற்றினாலே இதிலிருந்து எளிதில் குணமடையலாம்.
கீழுள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் தினமும் 2அல்லது 3 நேரம் சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வாருங்கள்..விரைவில் கண் பார்வை தெளிவாகும்.Gb 37,Liv2, tw23,ub1,2,St1,gb1,Ex1,2
Mohideen Acu Meetheen:
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment