Powered by Blogger.

பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள்

Wednesday, December 16, 2020

 பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள்

கடவுள் கொடுத்த வரம் சிரிப்பு என்பார்கள்! அந்த சிரிப்பு அழகாக இருப்பதற்கு காரணம் பற்கள் மட்டுமே. சிரிப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதிலிருந்து இருந்து பல விஷயங்களுக்கும் இந்த பற்களின் ஆரோக்கியம் அவசியம்.ஆனால் இன்று மிகவும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் சொத்தை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். பல் வலியை விட கொடுமையான வலி எதுவுமில்லை என்று கேள்விப்பட்டிருப்போம். இது மாதிரி எல்லாம் சிரமப்படாமல் இருக்க வருமுன் காப்பது நல்லது.

இந்த பதிவில் பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்கள், அதைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் பாட்டி வைத்திய குறிப்புகள் பலதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பல் சொத்தை என்றால் என்ன ?

எந்த உணவைச் சாப்பிட்ட பிறகும் வாயைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுதல் அவசியம். அப்படி சுத்தமாக வாயைக் கழுவாத இருக்கும்பொழுது கிருமிகள்(பாக்டீரியாக்கள்) பற்களைச் சென்று தாக்கும். இதனால் பல் சொத்தை பாதிப்பு ஏற்படும். பல் சொத்தை ஏற்பட்ட ஆரம்பக்கட்டத்தில் சாதாரண கரும்புள்ளி தென்படும். பிறகு பல்லில் சிறு ஓட்டை ஏற்படும்.

பல் சொத்தை எதனால் ஏற்படுகிறது?

1. சரியான முறையில் பற்களைத் துலக்காது.

2. இரண்டு வேளைகளும் பல் துலக்காமல் இருப்பது.

3. உணவு சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருத்தல்.

4. அதிகளவு இனிப்பு வகைகளைச் சாப்பிடுதல்.

5. பால் அருந்திய பின் வாயைச் சுத்தம் செய்யாமல் குழந்தைகளைத் தூங்க வைத்தல்.


பல் சொத்தை ஏற்பட்டால் வேறு என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்?

1. பல் சொத்தையைச் சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும்.

2. நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும்.

3. ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

4. பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

5. பற்களில் குழிகள் ஏற்படும். பற்கள் உடைந்து போய்விடும்.

6. இதனால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே நிலையான அமைப்பு இல்லாமல் போய் விடும்.

7. லேசான பல் வலி என்ற அளவில் ஆரம்பித்து மிகவும் கடுமையான வலி ஏற்படும்.

8. ஈறுகளில் சீல் ஏற்படும்.

9. கிருமிகளின் தாக்குதல் அதிகமாக அதிகமாகப் பற்களைத் தாங்கும் எலும்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதற்குச் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்து வரும் சூழல் உள்ளது.

10. நாளடைவில் சொத்தைப் பல்லைப் பிடுங்கி,நீக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.

பல் சொத்தைக்கான மருத்துவச் சிகிச்சை என்ன?

எனாமல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு மருத்துவர் நிரந்தரமாகப் பல் ஓட்டையை அடைத்து விடுவார்.ஒருவேளை ஓட்டை மிகவும் ஆழமாக இருந்தால் தற்காலிக அடைப்பை(சிமெண்ட் அடைப்பு) ஏற்படுத்தி மேலும் சொத்தை பரவாமல் தடுத்து விடுவார்.

ஒரு சிலருக்குப் பல் சொத்தை கடுமையான அளவு ஏற்பட்டிருக்கும். இதனால் பற்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.ஆனால் தற்போது ரூட் கேனல் சிகிச்சை முறை வந்துள்ளது. இந்த முறையில் பற்களை அகற்றாமல் பற்களின் வேர்களில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவதாக முடியும்.

பல் வலி/பல் சொத்தை சரியாக பாட்டி வைத்திய குறிப்புகள்

பல் வலிக்கு மூலகாரணம் பற்சொத்தை என்று பார்த்தோம். அந்தவகையில் கீழே பல் வலியைக் குறைக்க உள்ள பாட்டி வைத்திய குறிப்புகளைப் பார்க்கலாம்.

துளசி இலை

சிறிதளவு துளசி இலைகள் ,உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும்.

கிராம்பு

சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

உப்புத்தண்ணீர்

மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும்.

வேப்பிலை

வேப்பிலை சாற்றைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு சற்று மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும். பல்வலி தீரும். அந்த காலத்தில் இந்த வேப்பிலையின் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்பங்குச்சியில் பல் துலக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பல் சொத்தை ஏற்படாமல் இருக்க என்ன வழி?👇👇👇


இனிப்பு பொருட்களைத் தவிருங்கள்.இனிப்பு பொருட்களை சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் சொத்தை ஏற்படுவதற்கான மூலகாரணம். சாக்லேட் ,இனிப்பு பலகாரங்கள் , ஐஸ்கிரீம் ,கேக் போன்ற உணவுகளில் சர்க்கரை அதிக அளவு காணப்படும். இவற்றைச் சாப்பிடும் பொழுது இதன் துகள்கள் பல் இடுக்கில் ஒட்டிக்கொள்ளும்.வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா இவற்றுடன் செயல்பட்டு லாக்டிக் அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும்.இந்த அமிலமே பற்களின் வெளிப்பூச்சான எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தகட்ட நிலையாகப் பற்கள் சொத்தையாகி விடும்.

பூண்டு

பூண்டில் அதிகளவு சல்பர் உள்ளது.இது பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது. இந்த பூண்டை லேசாக தட்டி உப்பில் கலந்து சொத்தையான பல்லின் மீது வைத்து அழுத்தவும். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை நீங்கி நல்ல பலன் கிட்டும்.

எருக்கம்பால்

எருக்கம் பாலை எடுத்து பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். இந்த முறையைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பல் சொத்தை சரியாகும்.

இலவங்கப் பொடி

பல் சொத்தை உள்ள இடத்தில் இலவங்கப் பொடியைத் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மிதமான சுடுநீரில் வாய் கொப்பளித்துக் கொள்வது அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை, பல்வலி போன்ற பிரச்சனைகள் தீரும்.

ஆயில் புல்லிங்

தினமும் நல்லெண்ணெய் வாயில் ஊற்றி பத்து நிமிடம் அளவிற்கு வைத்துக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு பல் ஆரோக்கியம் மேம்படும்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும்.இந்த நீரைக் கொண்டு தினமும் வாய்கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது பல்வலி ,பல் சொத்தைச் சரியாகும்.

அறுகம்புல்

அறுகம்புல் சாற்றைப் பல் சொத்தை ஏற்பட இடத்தில் தடவ வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.இதைத் தினமும் செய்து வரும் பொழுது பல்நோய் குணமடையும்.

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்

சுத்தமாகப் பராமரியுங்கள்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பற்களில் சொத்தை ஏற்படும். அதனால் பற்களைச் சுத்தமாகப் பராமரிப்பது மிக முக்கியம். காலை எழுந்தவுடனும் இரவு தூங்கும் முன்பும் மறக்காமல் பற்களைச் சுத்தமாகத் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதேபோல பற்களை அரைகுறையாகத் துலக்கக் கூடாது. சரியான வழியில் துலக்கினால் மட்டுமே இடுக்குகளில் புகுந்து அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

இவற்றைச் செய்யாதீர்கள்

குண்டூசி,ஹேர் பின் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து பற்களை நோண்ட வேண்டாம். இது பற்களையும் வேர்களையும் பாதிக்கும். சில சமயம் ஈறுகளில் புண் ஏற்பட்டு வீக்கம் வந்து விடும். சில சமயங்களில் சீழ் கூட பிடித்துவிடும். எனவே இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல வெற்றிலை ,பான்மசாலா ,புகையிலை போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும். இவை அனைத்துமே முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பரிசோதனை

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையையும் முளையிலே கிள்ளி விட்டால் பெரிய பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

பழ வகைகள்

அன்னாசி ,ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த பழ வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகளவு கைகொடுக்கும்.

ஆலம் விழுது

ஆலம் விழுதுகளைக் கொண்டு தினமும் பல் தேய்க்கலாம். இதன்மூலம் பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சயம்.

St4,6,Li4 acupuncture points.press 2minutes 2times a day.

 Mohideen Acu Meetheen:

Read more...

கண் பார்வைக் குறைபாடுகள்

Saturday, December 12, 2020

 மனிதனின் கண் என்பது 576 மெகாபிக்ஸல் கேமரா. ஒரு லென்ஸ் மற்றும் ஒரு திரை. திரைதான் ரெட்டினா. திரை நகராது இருக்கும். இந்த லென்ஸை தசைகளால் சுருக்கவும் நீட்டவும் முடியும். அதன்மூலம் பக்கத்தில் இருக்கும் பொருளுக்கும் தூரத்தில் இருக்கும் பொருளுக்கும், பார்வையை அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் எடுத்துப்போக முடியும்.

நமக்கு வரும் பொதுவான கண் பார்வைக் குறைபாடுகளாக மூன்றைச் சொல்லலாம். 

முதலாவது, கிட்டப்பார்வை (Myopia). கிட்டப்பார்வை என்றால் அருகில் இருக்கும் பொருட்கள் எல்லாம் தெளிவாக இருக்கும். ஆனால், தூரத்தில் இருப்பவை தெரியாது. கண்கோளம் நீட்சி அடைவதால் அல்லது ஆஸ்டிக்மாட்டிஸம் எனப்படும் கார்னியா அமைப்பின் கோளாறால் ஒளி அலைகள் ரெட்டினாவுக்கு முன்பே குவியும். அப்போது தூரத்துப் பொருட்கள் மங்கலாகவே இருக்கும். யாரோ நடந்து வருகிறார்கள் என்று நினைத்திருந்து, அருகில் வந்தவுடன், “ஓ! சங்கரா? அதான் சங்கர் மாதிரியே இருக்கேன்னு பாத்தேன்” என்பார்கள். இவர்களுக்குக் கண்ணாடி அணிவது பலன் தரும். அவை குழி ஆடி (concave lens) வகையைச் சார்ந்தது. அவை ஒளியை இன்னும் கொஞ்சம் விரட்டி சரியாக ரெட்டினாவில் விழச் செய்யும். 

அடுத்தது, தூரப்பார்வை (Hyperopia). கிட்டத்து ஒளி அலைகள் ரெட்டினாவில் குவியாமல், ரெட்டினாவையும் தாண்டி அதன் பின்புறத்தில் குவிவதால், பார்வை தெளிவாக இருக்காது. இவர்களுக்கு குவி ஆடி (convex lens) வகையைப் பொருத்துவார்கள். அவை, ஒளியை சரியாக ரெட்டினாவில் விழச்செய்யும்.

கடைசியாக, வயதான காரணத்தால் கண் லென்ஸின் இயல்பான சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைவதால், சிறு எழுத்துகளை நம்மால் தெளிவாகப் படிக்க முடியாது

ஆம். மிகவும் தெளிவான விளக்கம்... இதைத்தான் "கிட்டக்குழி தோண்டி தூரக்குவி" என்கிற சொல்லடையில் வரையறுப்பார்கள். அதாவது, கிட்டப்பார்வை குறைபாடு என்றால் குழி ஆடியும், தூரப்பார்வை குறைபாடு என்றால் குவி ஆடியும் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக இவை ஏற்படுவதற்கான காரணம் லென்ஸ் மற்றும் திரைக்கான தூரம் ஏற்றத்தாழ்வினால் ஏற்படுகிறது. இதற்கு விழித்திரையில் சரியான நீர்மத்தன்மை மாற்றமடைவதாலும், லென்ஸின் சுருங்கி விரியும் தன்மை குறைவதாலும் ஏற்படுகிறது. இது ஏற்படுவதற்கான காரணமாவது நம் கண்களுக்கும் உற்று நோக்கும் பொருளுக்கும் இடையே தொடர வேண்டிய தூரத்தை சரிவர செய்யாததன் விளைவே! அதாவது, பொருளினை கண்களுக்கு மிக அருகிலோ அல்லது அதிக தூரத்திலோ வைப்பதாலும், மிக அதிக நேரம் ஒரே இடத்தினை உற்று நோக்குவதாலும், உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமலிருந்தாலும் இது போன்ற குறைபாடுகள் ஏற்படும். வாழ்வியல் முறையை சரிவர பின்பற்றினாலே இதிலிருந்து எளிதில் குணமடையலாம்.

கீழுள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் தினமும் 2அல்லது 3 நேரம் சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வாருங்கள்..விரைவில் கண் பார்வை தெளிவாகும்.Gb 37,Liv2, tw23,ub1,2,St1,gb1,Ex1,2

Mohideen Acu Meetheen:

Read more...

மைத்ர முகூர்த்தம் கணக்கிடும் முறை :

 மைத்ர முகூர்த்தம் கணக்கிடும் முறை :


1. செவ்வாய்க்கிழமையும் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் - 100% 

2. செவ்வாய்க்கிழமையும் + அனுஷ நட்சத்திரமும் + விருச்சிக லக்கினம் - 100%

 வேறு கிழமைகள் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் - 75% 

வேறு கிழமைகள் + அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்கினம் - 75%

Source:

https://youtu.be/g1SBPuUobow

Read more...

கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம்,

Friday, December 11, 2020

 கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.


பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் காரணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் (Osteophytes) வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும்.


இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.


குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற்பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும்.


கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.


அறிகுறிகள்


இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும்.


என்ன பரிசோதனை?


கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.


என்ன உணவு?


புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


தடுப்பது எப்படி?


# எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.


# பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.


# ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.


# கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.


# கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.


# தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.


# மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.


# அளவுக்கு அதிகமான சுமையைத் தூக்காதீர்கள்.


# உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


# நடத்தல், நீந்துதுல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் கடைப்பிடியுங்கள்.


# கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும் நல்லது.


# மோசமான சாலைகளில், ஸ்பீடு பிரேக்கர்களில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

Mohideen Acu Meetheen:


Read more...

தைமஸ் சுரப்பி

 தைமஸ் சுரப்பி  :-                

இரத்த வெள்ளணுக்களில் 5 வகை உண்டு. அவற்றில் நிணவணுக்கள் (Lymphocytes) ஒரு வகை. இவற்றில் பி நிணவணுக்கள் (B–Lymphocytes), டி நிணவணுக்கள் (T–Lymphocytes) என இரு வகை உண்டு. பி நிணவணுக்கள் (B–Lymphocytes) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. டி நிணவணுக்களை (T–Lymphocytes) ‘தைமஸ் சுரப்பி’ (Thymus gland) உற்பத்தி செய்கிறது.


மனிதன் உள்ளிட்டப் பாலூட்டிகளுக்கு உடலில் உருவாகிற முதல் ‘நிணவகை உறுப்பு’ (Lymphoid organ) இதுதான். கழுத்தும் நெஞ்சும் இணைகிற இடத்தில், நெஞ்சு எலும்புக்குப் பின்புறமாகவும், மூச்சுக் குழாய்க்கு முன்புறமாகவும் இருக்கிறது, தைமஸ் சுரப்பி. பிரமிட் வடிவில் இருக்கிற இந்தச் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலோடு தொடர்புடையது; தொற்றும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.


நாம் பிறக்கும்போது இதன் எடை 12 கிராம். இது 12 வயதுவரை மட்டுமே வளர்கிறது. அப்போது இதன் எடை 36 கிராம். அதன் பிறகு இது சுருங்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இது 10 கிராம் எடையில் இருக்கும். அதனால்தான் முதுமையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. மனிதரைத் தவிர மற்ற விலங்கினங்களுக்குத் தைமஸ் சுரப்பி தொடர்ச்சியாக வளர்ந்து, சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.


தைமஸ் சுரப்பியில் வலது, இடது என இரண்டு மடல்கள் (Lobes) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுண்மடல்கள் (Lobules) இருக்கின்றன. இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள். புறணியில் இளம் நிணவணுக்களும், அகனியில் முதிர்ந்த நிணவணுக்களும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ‘ஹஸல் கார்ப்பசல்ஸ்’ (Hassall’s corpuscles) எனும் சிறப்பு நிணவணுக்களும் உள்ளன.


இவற்றின் வேலைதான் என்ன?


தைமஸ் சுரப்பி, டி நிணவணுக்களை மட்டுமில்லாமல், ‘தைமிக் ஹார்மோன்களை’யும் (Thymic hormones) உற்பத்தி செய்கிறது. அவற்றில் முக்கியமானவை தைமுலின் (Thymulin), தைமோஸின் (Thymosin), தைமோபாய்டின் (Thymopoietin). இவைதான் பி நிணவணுக்களுக்கும் டி நிணவணுக்களுக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊட்டுகின்றன. உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழையும்போது அவற்றை எதிர்க்கின்ற எதிர்ப்பொருட்களை (Anti bodies) உருவாக்கி, அந்தக் கிருமிகளை அழிக்கவும், உடலிலிருந்து வெளியேற்றவும் நிணவணுக்களுக்குப் பயிற்சி தருகின்றன. நிணவணுக்கள் ரத்தத்தில் மட்டுமில்லாமல், நிணநீர் மண்டலத்திலும் பயணம் செய்கின்றன.


அது என்ன நிணநீர் மண்டலம்?


உடலில் ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக நிணநீர் மண்டலம் (Lymphatic system) இருக்கிறது. இதுவும் நோய் காக்கும் காவலனாக அமைந்துள்ளது. தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருள்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு 2 - 3 லிட்டர்வரை நிணநீர் சுரக்கிறது.


இது உடலில் ஆங்காங்கே சிறு சிறு நிண நாளங்களில் சேகரிக்கப்படுகிறது. சிறிய நிண நாளங்கள் ஒன்று சேர்ந்து, பெரிய நிண நாளமாக உருவாகிறது. பேருந்து செல்லும் பாதையில் பேருந்து நிறுத்தங்கள் இருப்பதைப்போல், இந்த நாளங்கள் செல்லும் பாதையில் ‘நிணக்கணுக்கள்’ (Lymph nodes) இருக்கின்றன. குறிப்பாகத் தலை, கழுத்து, அக்குள், வயிறு, தொடை இடுக்குகள் ஆகிய இடங்களில், தோலுக்கு அடியில், ஒரு பட்டாணிக் குவியல் மாதிரி காணப்படுகின்றன. உடலில் சுமார் 600 நிணக்கணுக்கள் உள்ளன. ரத்தச்சுற்றோட்டதுக்கு இல்லாத இந்தச் சிறப்புத் தகுதி நிணநீர் சுற்றோட்டத்துக்கே உரியது.


உடல் எங்கும் ஒரு சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ள நிண நாளங்கள் தாம் கொண்டுவரும் நிணநீரை அருகில் உள்ள நிணக்கணுக்களில் சேர்க்கின்றன. அந்த நிணக்கணுக்களில் இருந்து வேறு புதிய நிண நாளங்கள் புறப்படுகின்றன. அவற்றில் மறுபடியும் நிணநீர் பயணிக்கிறது. இறுதியில் இந்த நாளங்கள் வலது, இடது கழுத்துப் பட்டை எலும்பின் அடியிலுள்ள சிரைக்குழாய்களில் (Subclavian veins) இணைகின்றன. அதன் வழியே ரத்த ஓட்டத்தில் நிணநீர் கலக்கிறது.


நிண நாளங்களில் வால்வுகள் உள்ளதால், நிணநீர்ப் போக்குவரத்து ஒரு திசைப் பயணமாக இதயத்தை நோக்கியே நிகழ்கிறது. நிண நாளங்களைச் சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால் இந்தப் போக்குவரத்து சாத்தியமாகிறது. அப்போது திசுக்களிலிருந்து பாக்டீரியா மற்றும் சில நுண்ணுயிரிகளை நிணநீர் உறிஞ்சிக்கொள்கிறது. அவற்றை நிணக்கணுக்கள், மண்ணீரல், தைமஸ் ஆகிய நிணவகை உறுப்புகள் வடிகட்டி வெளியேற்றுகின்றன.


இவ்வாறு நிணநீர், நிண நாளங்கள், நிணக்கணுக்கள், தைமஸ், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை, குடல் மற்றும் சுவாச மண்டல நிணத்திசுக்கள் போன்ற நிண வகை உறுப்புகள் அனைத்தையும் கொண்டது நிணநீர் மண்டலம். நிணநீரில்


கலக்கும் உடல் கழிவுகளை நீக்கி, நோய்க்கிருமிகளை அழித்து, அயல்பொருட்களை அகற்றிச் சுத்தப்படுத்தி, மீண்டும் அந்த நிணநீரை ரத்தத்துக்கு அனுப்புவது இந்த மண்டலத்தின் முக்கிய வேலை.


அதோடு, தந்துகிகளின் சுவரில் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாக உள்ள உணவு மூலக்கூறுகள் நிண நாளங்களின் வழியே உடலுக்குள் செல்கின்றன. உதாரணமாக, குடலில் குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்படும் கொழுப்பு உணவு நிண நாளங்கள் வழியாகவே ரத்தத்தில் கலக்கிறது. 

நெறிக்கட்டு என்பது என்ன?


நோய்த்தொற்று ஏற்படும்போது, உடலுக்குள் புகுந்துகொள்ளும் நோய்க் கிருமிகளோடு போராடி அவற்றை அழிப்பதற்கு நிணக்கணுக்கள் நிறைய நிணவணுக்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன. அப்போது நிணக்கணுக்கள் கோலிக்குண்டு அளவுக்குப் பெரிதாகின்றன. இதைத்தான் ‘நிணக்கணு வீக்கம்’ அல்லது ‘நெறிக்கட்டு’ என்கிறோம். உதாரணமாக, காலில் புண் வந்தால் தொடை இடுக்கில் நெறி கட்டும். நோய்க்கிருமிகளின் பாதிப்பு மிக அதிகமாக இருந்து, அது நிண நாளங்களை அடைத்துக்கொள்ளுமானால், திசுக்களில் நீர் கோத்து, வீங்கிவிடும். பாதங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது கால் முழுவதும் சிவப்பு நிறத்தில் வீங்குவது இப்படித்தான்.


உடலில் புற்றுநோய் இருந்தால், அது உடலுக்குள் பரவக்கூடிய பாதைகளில் ஒன்று நிணநீர்ப் பாதை. எந்த உடற்பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ. அதோடு தொடர்புடைய நிணக்கணுக்களைத் திசு ஆய்வு (Biopsy) செய்தால், புற்றுநோய் பரவியுள்ளதா என்பது தெரிந்துவிடும். உதாரணமாக, மார்பில் புற்றுநோய் இருந்தால், அக்குளில் உள்ள நிணக்கணுக்களைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள முடியும். மார்பில் புற்றுநோய் இருந்தால், அந்த நிணக்கணுக்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடுகிறார்கள்.

Source:

Mohideen Acu Meetheen:

Read more...

கண் துடிப்பு காரணம்

Wednesday, December 9, 2020

கண் துடிப்பு காரணம்: 1

மன அழுத்தம், அதிக அளவு காஃபைன் சேர்த்தல், தூக்கம் கெடுதல் அல்லது போதுமான தூக்கமின்மை போன்றவை கண் துடிப்புக்கு காரணம் ஆகும்.

கண் துடிப்பு காரணம்: 2

மது அருந்துதல், பிரகாசமான விளக்கு வெளிச்சம், கண் பரப்பு மற்றும் இமையின் உள்பக்கம் உறுத்தல், அதிக உடலுழைப்பு, புகை பிடித்தல், காற்று, தலை சுற்றுவது போன்ற உணர்வு, மருந்துகள் சாப்பிடுதல் ஆகியவையும் கண்ணிமை துடிப்புக்குக் காரணமாவதோடு, அதை அதிகப்படுத்தவும் செய்யும்.

கண் துடிப்பு காரணம்: 3

பெரும்பாலும் வலி இல்லாமலே தான் இமை துடிக்கும்.

கண் துடிப்பு காரணம்: 4

இது ஆபத்தானதும் அல்ல. பல நேரங்களில் சிகிச்சை ஏதும் தேவையில்லாமல் தானாகவே இது நின்று விடும்.

இமையில் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் துடிப்பை தூண்டும் காரணிகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் இமை துடிப்பை தடுக்கலாம்.

சரி இந்த கண் துடிப்பு நிற்க (How to stop eye twitching) சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கண் துடிப்பு நிற்க (How to stop eye twitching) சில வழிமுறைகள்:

இமை துடிப்பு நிற்க – காஃபைன்:

தேநீர் மற்றும் காஃபி போன்ற காஃபைன் சேர்ந்த பானங்களை குடிப்பது, காஃபைன் கலந்த சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளலாம் அல்லது முற்றிலும் நிறுத்தி விடலாம்.

ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் காஃபைனை நிறுத்திவிட்டு கண்ணிமை துடிக்கிறதா என்று கண்காணிக்கலாம்.

கண் துடிப்பு நிற்க – மதுபானங்கள்:

தங்களுக்கு கண்கள் துடிப்பதற்கு மதுபானமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே கண் துடிப்பு நிற்க மது அருந்துவதை தவிர்த்து கொள்ளவும்.

இமை துடிப்பு நிற்க – ஆழ்ந்த உறக்கம்: 

சரியான தூக்கம் இல்லையென்றாலும், கண் தொடர்ந்து அதிகமாக துடித்து கொண்டே இருக்கும். எனவே ஒருவருக்கு இரவு தூக்கமானது ஏழு முதல் எட்டு மணி நேரம், நல்ல ஆழ்ந்து உறங்குங்கள்.

குறிப்பாக படுக்கைக்குச் செல்லும் முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கண் துடிப்பு நிற்க – நீர்ச்சத்து குறைபாடு:

உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து குறைபாட்டினால், இந்த கண் துடித்து கொண்டே இருக்கும்.

எனவே தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். இவ்வாறு செய்வதினால் இந்த கண் துடிப்பதை தடுத்துவிடலாம்.

கண் துடிப்பு நிற்க  – ஊட்டச்சத்து:

மெக்னீசியம் போன்ற சத்துகள் குறைவதும் கண்ணிமை துடிப்பை உருவாக்கக் கூடும் என்கின்றர்.

கண் துடிப்பு நிற்க  – ஹைட்ரோதெரப்பி:

கண்களை மூடிக்கொண்டு குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரைs மாறி, மாறி இமைகள் மேல் அடித்துக்கொள்ளலாம்.

ஹைட்ரோதெரபி என்ற இந்த முறையில், தண்ணீரை தெளிக்கும்போது கண்களில் உள்ள இரத்தநாளங்கள் சுருங்கும், வெதுவெதுப்பான நீர் படும்போது இரத்தநாளங்கள் விரிவடையும். அதன்மூலம் கண்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

கண் துடிப்பு நிற்க – பயிற்சிகள்

எளிமையான சில பயிற்சிகள் மற்றும் மசாஜ் செய்வதன் மூலம் கண்களுக்கு ஓய்வும் இளைப்பாறுதலும் கிடைக்கும். இமையில் இழுப்பு ஏற்படுவது இதன் மூலம் குறையும்.

கண் துடிப்பு நிற்க  – மசாஜ்:

கையின் நடுவிரலை இமைகள்மேல் பதித்து, விரலை வட்டவடிவமாக சுழற்றி (circular motion) அரை நிமிட நேரத்துக்கு (30 விநாடிகள்) மசாஜ் செய்யலாம்.

இது இமைகளில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு கண் தசைகளை வலுவாக்கும்.

Source:

விழிப்புணர்வு விவேக்

Read more...

கோள்களின் அலைவீச்சிலிருந்து நம் உயிருக்கு எவ்வாறு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கின்றன?*

Monday, December 7, 2020

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்*

கேள்வி: கோள்களின் அலைவீச்சிலிருந்து நம் உயிருக்கு எவ்வாறு ஆக்கமும், ஊக்கமும் கிடைக்கின்றன?*

பதில்:* இந்தப் பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது பரமாணுக்களுடைய கூட்டு இயக்கமே. பரமாணு என்பது மிக நுண்ணிய சுழலலை. அதனால், எல்லாப் பொருள்களுமே அலைகளுடைய கூட்டு இயக்கமாகவே உள்ளன. அந்தக் கூட்டு இயக்கத்தில் பரமாணுக்களின் சுழல் விரிவுக்கேற்ப, காந்த ஆற்றல் இரசாயனங்களாக மாறிக் கொண்டே இருக்கின்றன.


 ஒவ்வொரு பொருள்களிலிருந்தும் அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப பொருத்தமான அலை வந்து கொண்டேயிருக்கிறது. அது மற்றொரு பொருளிலிருந்து வரக்கூடிய அலையோடு மோதும்போது மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுறுவுதல், முன் பின்னோடுதல் என்ற ஐந்து விதமான அலையியக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்., 


 இந்த அலையியக்கத் தத்துவத்தைப் பின்னனியாக வைத்துப் பார்த்தீர்களானால் பிரபஞ்சத்திலிருந்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களிலிருந்து – காந்த அலைகள் வந்து கொண்டேயிருக்கின்றன என்பது தெரிய வரும். எந்த நட்சத்திரங்கள், எந்த கோள்களிலிருந்து அலைகள் வருகின்றனவோ அந்தந்த நட்சத்திரங்கள் அல்லது கோள்களின் தன்மைகளையும், ஆற்றலையும் அடக்கமாகக் கொண்டிருக்கும்.


 அந்த ஆற்றல் துகள் உயிர்களின் மீது மோதுகிறபோது அங்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த உயிர் வகைகள் ஒவ்வொன்றும் வருகின்ற அலைகளை எந்த அளவுக்கு வாங்கிக் கொள்கின்றன என்பது அவற்றின் கருமையப் பதிவில் அமைந்துள்ள ஈர்ப்பைப் பொறுத்தது.


 உதாரணமாக 100 பூத்தொட்டியை வைத்திருக்கின்றோம். அதில் 100 விதைகளை ஊன்றுகின்றோம். ஒரே மண், ஒரே தண்ணீர் என்றாலும் அந்தந்த விதைக்குத் தகுந்தவாறு செடி வரும். அதேபோல் ஒவ்வொரு ஜீவனும் கோள்களிலிருந்து வருகின்ற ஆற்றலில் இருந்தும், உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், பூமியின் மத்தியிலிருந்து மேற்பரப்பை நோக்கி வருகின்ற சக்தியிலிருந்தும் அதற்கு வேண்டியதை தான் எடுத்துக்கொள்ளும்; தன்மயமாக அவற்றை மாற்றியும் கொள்ளும்.


 ஒவ்வொருவரும் பிறந்தபொழுது எந்தெந்தக் கோள்களின் தொலைவு எவ்வளவு இருந்ததோ, அதற்கு ஏற்ப காந்த அலைப் பதிவுகளை என்னென்ன அலை நீளத்தில், அழுத்தத்தில் பெற்றிருந்தோமோ, அந்தந்தக் கோள்கள் பூமிக்கு அருகில் வரும்போதும், விலகிச் செல்லும்போதும் உடலில் வெவ்வேறு விதமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு கோள் இன்னொரு கோளோடு சேர்ந்து வரும்போது ஒரு வகையான ரசாயன மாற்றமும், மாறி வரும்போது வேறு வகையான ரசாயன மாற்றமும் கோள்களின் கூட்டமைப்பிற்குத் தகுந்தவாறு ஏற்படுத்துவதால் உடலின் சக்தி ஓட்டத்தில் மாற்றம் தோன்றும். இவ்வாறு நாம் கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியைப் பெறுகிறோம்.


வாழ்க வளமுடன்!


*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

Read more...

எலும்புகள் உறுதியாக இருக்க

 எலும்புகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா?

உடலுக்கு  அஸ்திவாரமாக  விளங்குவது எலும்புகள்   தான். நாம் ஓடி விளையாட, நிற்க, அமர   அனைத்து வேலைகள் செய்வதற்கும் எலும்புகள்   வலிமையாக இருப்பது அவசியமாகும். எலும்புகள் வலிமையாக   இருக்க முக்கியமாக நம் உடலுக்கு தேவைப்படும் சத்து   கால்சியம் ஆகும். எலும்புகளில் முறிவு ஏற்பட்டால் அவை   விரைவில் இணைய கால்சியம் சத்து தேவைப்படுகிறது. கால்சியம்   சத்தை கிரகிக்க வைட்டமின் -டி அவசியமாக தேவைப்படுகிறது. இந்த இரண்டு  சத்துக்களும் தேவையான அளவு கிடைக்கப்பட்டால் எலும்புகளில் எந்த பிரச்சனையும்  ஏற்படாது.


கால்சியம்   நிறைந்த பொருட்கள்   என்று சொன்னாலே நமக்கு   முதலில் நியாபகம் வருவது   பால் தொடர்பான பொருட்கள் தான். பால்   மற்றும் அது சம்மந்தமான பொருட்களில் கால்சியம்   சத்து அதிகளவில் இருப்பதால் எலும்புகள் வலிமையாக   இருக்க உதவுகிறது. எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்கள்  வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் போது   அவர்களுக்கு கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க், டோன்டு மில்க்  போன்றவற்றை கொடுக்கலாம். காரணம்   ஓய்வு காலங்களில் அவர்களுக்கு கொழுப்பு   சத்து அதிகரிக்க கூடும். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட   கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்பது அவசியமாகும்.


லாக்டோஸ் இண்டாலரன்ஸ் எனும் பால் ஒவ்வாமை உடையவர்கள்,   தினமும் சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு போன்றவற்றை  உட்கொண்டாலே   போதும். அவர்களுக்கு  1000 மி.கி கால்சியம் கிடைத்து   விடும்.


ஆஸ்டியோபொரோசிஸ் எனும்  எலும்பு அடர்த்திக் குறைதல் பிரச்சனை   பெண்களுக்கு இருக்கும். அவர்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவரின்   ஆலோசனைப்படி பால் அருந்த எடுத்துக் கொள்ளலாம்.  


100 மி.கி சோயா பீன்ஸில் 25 மி.கி கால்சியம் உள்ளதால்   எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலையில் சோயாவில்   பால் செய்து அருந்தி வரலாம். அதுமட்டுமில்லாமல் இந்த சோயாவில்   கொழுப்பு குறைவாக உள்ளதால், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களும்   இதை குடித்து வரலாம். இதனால் எலும்புகள் வலுவடையும்.


100 மி.கி மீனில், 15 மி.கி கால்சியம்   உள்ளதால் இதை வாரத்திற்கு இருமுறை உணவாக  உண்ண எடுத்துக் கொள்ளலாம்.  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களான  நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களை   உண்பதன் மூலமாக எலும்புகள் அடர்த்தியாகும்.


ஆட்டுக்காலின்  எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து   போன்ற சத்துக்கள் உள்ளதால் இதில் தாது உப்புகள் நிறைந்துள்ளன.  எனவே ஆட்டு காலில் சூப் செய்து குடிக்கலாம். இதனால் எலும்பு   விரைவில் கூடும்.


100 மி.கி நண்டில் 16 மி.கி கால்சியம்  உள்ளதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்   வாரத்திற்கு இருமுறை இதை சமைத்து உண்ணலாம். அதுமட்டுமில்லாமல்   உடலுக்கு இது உஷ்ணத்தை தருவதால் வெயில் காலங்களில் இதை தவிர்த்து  விடுங்கள்.


சைவம்   உண்பவர்களுக்கு   இது முக்கியமானது. கொள்ளில்  சோயாவிற்கு நிகரான கால்சியம்   சத்து நிறைந்துள்ளதால் 70 வயதிற்கும்   அதிகமானவர்கள், சைவ பிரியர்கள் கொள்ளில்   ரசம் வைத்து தினமும் குடித்து வந்தால், எலும்புகள்   வலுவாக இருக்கும்.


புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள்  போன்ற கனிவகைகளையும் தினமும் உண்டு வருவதால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.


100 மி.கி அத்திப் பழத்தில் 26 மி.கி கால்சியம்  நிறைந்துள்ளதால், இதை வாரத்திற்கு இருமுறையாவது, கட்டாயம்   உட்கொள்ள எடுத்துக்  கொள்ள வேண்டும்.


கேரட், வெண்டைக்காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு  போன்ற உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வருவது  அவசியமாகும் .


கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை  போன்ற கீரைகளில் அதிக அளவில் கால்சியம் சத்து இருப்பதால் இதில் தினமும் ஏதாவது   ஒரு கீரையை உண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் கீரையை உண்ணக்கூடாது. காரணம் செரிமானம்   அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தும், எனவே காலை மற்றும் மதிய நேரங்களில் இதை குழம்பாகவோ, பொறியலாகவோ, கடைந்தோ   சாத்ததுடன் பிசைந்து உண்ணலாம்.

100 மி.கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம்  உள்ளதால் எலும்புகளில் பிரச்சனை உள்ளவர்கள்   இதை அடிக்கடி கஞ்சி அல்லது தோசை செய்து உண்டு  வரலாம். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை மட்டும் நீங்கள்   பாலோ செய்தால் போதும், எலும்புகள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும்   இருக்கும்

Source

Mohideen Acu Meethee


n:






Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP