Powered by Blogger.

முதன்மையான காயத்ரி மந்திரம்

Tuesday, August 29, 2023

 முதன்மையான காயத்ரி மந்திரம்

படைப்புக் கடவுளான பிரம்மதேவன், புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் நடத்திய யாகத்தின் போது, தன்னுடைய சக்தியால் காயத்ரி தேவியை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. இந்த காயத்ரி தேவி 5 முகங்களையும், 10 திருக்கரங்களையும் கொண்டவள். காயத்ரி மந்திரம் அனைத்து மந் திரங்களிலும் மேலானதாக விளங்குகிறது. என வேதான் பகவத் கீதையில் கிருஷ்ணர், 'நான் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறுகிறார்.

'காயத்ரி' என்பதற்கு 'தன்னை ஜபிப்பவர்களை காப்பாற்றுவது’ என்று பொருள். 'ஓம் பூர் புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந ப்ர சோதயாத்' என்ற காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப் பவர்களுக்கு, அனைத்து விதமான ஆபத்துகளும் நீங்கும். பயம் என்பதே அறியாதவர்களாக அவர்கள் மாறு வார்கள். காயத்ரி மந்திரம் ஜபிக்கப் பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட் டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். இந்த மந்திரத்தில் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்தில் இருந்தும், 'பர்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜூர் வேதத்தில் இருந்தும், 'தியோயோந ப்ரசோதயாத்' என்ற வார்த்தை சாம வேதத்தில் இருந்தும் எடுக்கப்பட்டு ஒரே மந்திரமாக அருளப் பட்டுள்ளது.

Read more...

நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்

 நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்


சூரியன் காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனிப் ப்ரசோதயாத்

புதன் காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புதப் ப்ரசோதயாத்

கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

சந்திரன் காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்ம விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

 ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்

குரு காயத்ரி
 
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருப் ப்ரசோதயாத்

சுக்ரன் காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

ஆன்மீக மலர் தினத்தந்தி.

Read more...

மனம் என்னும் மாமருந்து!

Sunday, August 20, 2023

 மனம்  என்னும் மாமருந்து!


அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்

ஒன்றே ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது..

எண்ணங்களில் சரி, தவறு கிடையாது. அவற்றை உருவாக்குவது நாம் இல்லை. எனவே, அவற்றுக்காக நாம் வருந்தவோ பொறுப்பேற்றுக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் சரிதான், இப்படி எண்ணம் - சிந்தனைக்கான வேறுபாடுகளை புரிந்துகொண்டு, அவற்றைக் கையாள்வதால் என்ன பயன்? அதற்கும் நோய்கள் குணமாவதற்கும் என்ன தொடர்பு?

இதனை புரிந்துகொள்ள, நாம் இதுவரை பார்த்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

உடல் தன்னைத்தானே குணமாக்கிக் கொள்ளும் தன்மை படைத்தது. நம்முடைய முறையற்ற வாழ்க்கை முறையால் நாமே உருவாக்கிக் கொள்ளும் எல்லா நோய்களையும் உடலால் குணப் படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு குணமாக்கும் முயற்சியைத்தான் பராமரிப்பு சக்தியின் பணிகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

உடலின் பராமரிப்பு சக்தி தன்னுடைய வேலையை முழுமையாகச் செய்ய வேண்டுமானால், நாம் அதன் பணிகளில் குறுக்கிடக் கூடாது. நாம் குறுக்கிடுவது என்பது உடலின் மூலமாகக் குறுக்கிடுவதையும்,

மனதின் மூலமாகக் குறுக்கிடுவதையும் குறிக்கிறது.

. இயற்கைக்கு மாறான எந்தவிதமான பழக்க வழக்கங்களால் நமக்கு தொந்தரவுகள் ஏற்பட்டதோ.. அதே பழக்கங்களை தொடர்வதும், உடல் வெளியேற்ற விரும்பும் கழிவுகளை அடக்கி வைக்க முயற்சிப்பதும் உடல் ரீதியான குறுக்கீடுகள் ஆகும்.

உடலை சமநிலையில் வைத்திருப்பதைப் போலவே மனதை சமநிலையில் வைத்திருப்பதும் பராமரிப்பு சக்தியின் மிக முக்கியப் பணியாகும். கோபம், துக்கம், கவலை, மகிழ்ச்சி, பயம்.. இவை அனைத்தும் உணர்ச்சிகளாக மாறும்போது மனம் சமநிலை தவறுகிறது. தொடர்ந்து மனச்சமநிலை பாதிக்கப்பட்டால், அதனை இயல்பிற்குக் கொண்டுவர பராமரிப்பு சக்தி அதிக அளவில் தன் ஆற்றலைச் செலவளிக்கிறது.

சாதாரணமாக உடலில் தோன்றும் ஒரு காயத்தை எவ்வித மருத்துவ உதவியும் இன்றி பராமரிப்பு சக்தி சில நாட்களில் ஆறவைக்கிறது. ஆனால், காயம் பற்றிய பயம் மனதில் தோன்றி மனச் சமநிலை குலையும்போது, காயத்தை குணமாக்க வேண்டிய பராமரிப்பு சக்தியின் ஆற்றல் பயத்தைப் போக்குவதற்காக செலவழிந்து விடுகிறது. சில நாட்களில் தானே குணமாகி இருக்க வேண்டிய காயம், பயம் என்னும் உணர்ச்சியால் நீடித்த காயமாக மாறுகிறது.

உடல் தன் இயல்பில் இயங்க வேண்டுமானால், மனமும் தன் இயல்பில் இயங்கவேண்டும். மனம் தன்னியல்பில் இருக்க வேண்டுமானால், நம் சிந்தனையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையை நாமே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

எண்ணத்தில் பயம் வருவது இயற்கை. எண்ணத்தில் எது வேண்டுமானாலும் வரலாம். அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. அவை அனைத்தும் உணர்வு நிலையில் இருப்பவை. அவற்றால் உடலுக்கோ, மனச்சமநிலைக்கோ கேடு ஏற்படுவதில்லை. ஆனால், எண்ணத்தில் தோன்றும் பயத்தை சிந்தனையில் அனுமதித்தால் மனச்சமநிலை குலைந்து பராமரிப்பு ஆற்றலை வீணாக்கும். நோய் இருப்பவர்கள், நீடித்த நோயாளியாக மாறுவார்கள். நோயற்றவர்கள், நோயை தாங்களே வரவழைத்துக் கொள்வார்கள்.

மனச்சமநிலை என்பது 'பாசிடிவ் தாட்' என்று சொல்லப்படும் நல்லெண்ணத்தைக் குறிப்பதில்லை. எண்ணத்தில் தோன்றும்

அனைத்தையும் ஏற்றுக்கொள்வதும், அவற்றுக்கு எதிராக போராடாமல் இருப்பதுமே மனச்சமநிலை ஆகும்.

ஒரே ஒருமுறை மனச் சமநிலையை அறிவு ரீதியாகப் புரிந்து கொண்டால், அது நிரந்தரப் புரிதலாக மாறி, எண்ணங்களைக் கையாளும் எளிய கலை நமக்குக் கைகூடுகிறது.

நாம் நூலின் துவக்கத்தில் பார்த்த, அற்புதங்கள் அனைத்தும் மனச்சமநிலையில் நிகழ்ந்தவை. உடலின் பணிகளில் மனம் குறுக்கிடாதபோது நடந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளாக மாற்றிக் கொள்ளும்போது 'நோசிபோ' என்னும் நாசமாக்கும் விளைவு தோன்றுகிறது. மன ஆற்றலையும் உடல் ஆற்றலையும் வீணடிக்கிறது.

நாம் மனதைப் புரிந்து கொண்டால் உடலைப் புரிந்துகொள்வது எளிது. ஏனென்றால், உடல்தான் மனமாகவும் இருக்கிறது. உடல், கண்ணுக்குத் தெரிகின்ற மனம். மனம், கண்ணுக்குத் தெரியாத உடல்!

மனதினுடைய திட வடிவம்தான் உடல். உடலினுடைய ஆற்றல் வடிவம்தான் மனம். ஒன்றைச் சீர்குலைத்தால் மற்றொன்றும் சீர்குலையும்.

இயற்கை விதிகளைப் பின்பற்றினால் உடல் நலத்தோடு வாழமுடியும். எண்ணங்களைக் கையாளத் தெரிந்தால் மன பலத்தோடு வாழமுடியும். ஏனெனில், நலம்தான் பலம்.

புற உலகும் அக உலகும் தன்மையில் வேறு வேறானவை. புற உலகில் போராட்டமும், அக உலகில் நீரோட்டமும் அவசியம். உடல் தன்னைக் காக்க போராடுகிறது. மனம் இயல்பில் இருக்க நீரோட்டத்தைப் போல இருக்க வேண்டும்.

இயல்பான மனதோடு வளமாக வாழ்வோம்.

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP