Powered by Blogger.

விக்கலை நிறுத்துவது சுலபம்

Sunday, June 14, 2020

விக்கலை நிறுத்துவது சுலபம்
சாதாரணமாக  நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம் . அப்போது மார்பு தசைகள் விரிகின்றன . மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது . உடனே , தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன . அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது . அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது . இதனால் நாம் சுவாசிக்கும் காற்று , திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றிநுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது . இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு . சில நேரங்களில் , மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால் ,அது மூளை கட்டுப்பாட்டை மீறி , தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும் , அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை . அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும் . அப்போது அந்த காற்று , புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதை போல , தொண்டையில் ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது . இதுதான் விக்கல் .வேக வேகமாக உணவை சாப்பிடுவது , மிகச்சூடாக சாப்பிடு வது , தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள் . வலி நிவாரணி மாத்திரைகள் , சில குறிப்பிட்ட வகை மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும் . இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால் , அது நோய்க்கான அறிகுறி ஆகும் .
 உதாரணத்துக்கு , இரைப்பையில் அல்சர் இருக்கும்போது , சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும் . உதரவிதானத்தில் நோய்த்தொற்று  கல்லீரல் கோளாறு , நுரையீரல் நோய்த்தொற்று , குடல் அடைப்பு , மூளைக் காய்ச்சல் , கணைய அழற்சி , பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும் மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள் . 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விட வேண்டாம் . பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும் . இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும் . வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால் , விக்கல் நின்றுவிடும் . ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால் , விக்கல் நிற் கும் . ஏதேனும் ஒருவகையில் தும்மலை உண்டாக்கினால் , விக்கல் |நிற்கும் அடுத்த வழி இது .
ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள் , பிறகு அந்த காற்றையே மீண்டும் சுவாசியுங்கள் . இவ்வாறு சற்று நேரம் செய்தால் , ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து , விக்கல் நின்றுவிடும் .
அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது .

Source
Daily thanthi.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP