Powered by Blogger.

சோன் பப்டி எப்படி தயாரிக்கலாம்.

Sunday, November 11, 2012


 சோன் பப்டி எப்படி தயாரிக்கலாம்.
சுவையான சோன் பப்டியை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - ஒன்றரை கப்
மைதா மாவு ஒன்றரை கப்
பால் இரண்டு டேபிள் ஸ்பூன்
சக்கரை இரண்டரை கப்
ஏலக்காய் பவுடர் ஒரு ஸ்பூன்
தண்ணீர் - ஒன்றரை கப்
நெய் 250 கிராம்
செய்முறை:
   ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து
கொள்ள வேண்டும். பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யை
ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்தமாவை போட்டு ,லேசாக 
பொன்னிறத்தில் வரும்போது இறக்கிவிடவும்.பின் அதை குளிர் வைக்க
வேண்டும்.அதே சமயம் ஒரு வாணலியில் தண்ணீர்,சக்கரை,பாலை 
ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.அந்த பாகு 
கெட்டியானதும் இறக்கி, அதையும் குளிர் வைக்கவேண்டும்.
   பின்பு ஒரு தட்டு எடுத்து,அதில் நெய்தடவி தனியாக வைத்துக்
கொள்ளவேண்டும்.பின் குளிர வைத்துள்ள மாவை,சக்கரை  பாகுவுடன் 
கரண்டியை வைத்து கிளரவேண்டும் .அவ்வாரு கிளறும்போது,நீளநீளமாக 
மாவானது சுருளும். அது குறைந்தது, பின் அதை தட்டில் ஊற்றி ஊற்றி,
அதன் மேல் ஏலக்காய் பவுடரை தூவி குளிர் வைத்து சதுர வடிவத் 
துண்டுகளாக்கி, பாதம் மற்ற்ம் பிஸ்தாவை வைத்து அலங்கரித்தால், 
சூப்பரான சோன் பப்டி ரெடி.



PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP