Powered by Blogger.

ஆன்லைன் மருந்து

Monday, June 12, 2023

 

ஆன்லைன் மருந்து


ஆன்லைனில் ஆர்டர் செய்தால் காய்கறி முதல் சாப்பாடு வரை அனைத்துமே வீடு தேடி வந்துகொண்டி ருக்கும்போது மருந்தை மட்டும் அனுமதிப்பதில் என்ன தப்பு? ஆன்லைனில் வாங்கும்போது தள்ளுபடி, கூடுதல் சலுகைகள் வேறு கிடைக்கின்றனவே என்று வாடிக்கை யாளர்கள் நினைக்கிறார்கள்.


மருந்து வணிகர்கள் சொல்வது நேரடி மருந்து வணிகத் தில் 7.25 லட்சம் மருந்துக் கடைகள், 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வணி கம் நடப்பதாக மருந்து வணிக அமைப்புகள் சொல்கின் றன. இவ்வளவு பெரிய வருமான-வேலைவாய்ப்பு தரும் கட்டமைப்பை ஆன்லைன் மருந்து வணிகம் சின்னா பின்னமாக்கிவிடும் என்பது மருந்து வணிக அமைப்புக ளின் குற்றச்சாட்டு. மருந்துக் கடைகள் மட்டுமல்லாமல், மருந்து விற்பனை பிரதிநிதிகளின் வேலையையும் இது பாதிக்கும்.

தூக்க மாத்திரை போன்ற ஒரு சில மருந்துகள் மட்டுமே, மருத்துவர் பரிந்துரை இல்லாததால் பார்மசிகளில் மறுக் கப்படுகின்றன. மிக பெரிய பாரம்பரிய நிறுவனங்கள் மட்டுமே மருந்துச்சீட்டு அடிப்படையில் மருந்துகளைத் தருகின்றன. தெரிந்த பார்மசி என்றால், எந்த மருந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கக் கூடிய நிலைமை உள்ளது. அரசு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் இதை கண்காணிக்கின்றனவா என்பதிலும் தெளிவில்லை.


மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து அனுப்பி, ஆன்லைன் மூலம் மருந்தை பெறுவதில் பிரச்சினை ஏற்படும். எழுதப் பட்ட மருந்து கிறுக்கலாக உள்ளதால், ஆன்லைன் பார்ம சிகளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் கள். இது உண்மைதான். ஒரெழுத்து மாறுபாட்டில் நோய்க் கான மருந்து தலைகீழாக மாறலாம். வாடிக்கையாளருக் கும் மருந்துகளை பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காது.

அதேநேரம் மருத்துவர்கள் ஏன் கிறுக்கலாக எழுத வேண் டும் என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பிட்ட மருத்துவர்க ளுடன், சில பார்மசிகள் புரிதலை வைத்துக்கொண்டுள் ளன. அதனால்தான் இந்த மருந்து நிச்சயமாக அங்கே கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


அதேநேரம் ஆன்லைன் மருந்து விற்பனை வந்தால், மருந்துக் கடைகள் குறைந்துவிடும், அவசர தேவைக்குக் கூடப் பக்கத்தில் இருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதும் உண் மையே.

Source:-

தினத்தந்தி 

Read more...

கலப்பட தேனை கண்டறிவது எப்படி?

Friday, June 2, 2023

 கலப்பட தேன் கண்டறிதல்


உணவுப் பொருளில் கலப்படம் செய்பவர்கள் தேனையும் விட்டு வைக்கவில்லை. தேனிலும் சர்க்கரைப் பாகு கலந்து சிலர் விற்பனை செய் கின்றனர். சிலர் வெல்லப் பாகுவை தேன் என்று ஏமாற்றி விற்பனை செய்வதும் உண்டு. எனவே தேனில் கலப்படம் இருக்கிறதா? என்பதை கண் டறிய சில வழிகளை பின்பற்றலாம்.


* ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடும் போது, அந்த தேனை வெள்ளைத்தாள் உறிஞ்சாமலும், காகிதத்தில் மேலும் தேன் பரவாம லும் இருந்தால் அது அசல் தேன். காகிதத்தால் தேன் உறிஞ்சப்பட்டால் அது கலப்படத் தேன்.


* ஒரு டம்ளர் தண்ணீருக்குள் சில துளி தேனை விட்டால், அந்த துளி தேன் தண்ணீரில் கரையாமல் இருந்தால் அது அசல் தேன். தண் ணீரில் கரைந்தால் அது கலப்படத் தேன்.


* ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை தீப்பெட் டியில் உரசும் போது உடனே தீப்பற்றினால் அது அசல் தேன். தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்படத் தேன்.

Source :- 

தினத்தந்தி 




G

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP